18 செப்., 2018

தேசிய ஊட்டச்சத்து மாத விழா-பாரம்பரிய உணவு திருவிழா

இன்று 18-09-2018 தேசிய ஊட்டச்சத்து மாத விழாவின் ஒரு பகுதியாக பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது.
பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் பல்வேறு வகையான பாரம்பரிய உணவுவகைகளை படைத்தது பிரமிக்கும் விதமாக அமைந்தது

தலைமை ஆசிரியர் மாதேசன்   தலைமைவகித்தார்.

ஆசிரியர்கள்
சிவகுமார் , கவிதா , ஜெகன்பாண்டியன் , சகாதேவன் , தெய்வானை, முருகன், ஈழவேந்தன் , சுரேஷ் குமார் , நாகேந்திரன் , சங்கர், பொற்செல்வி, கனகவள்ளி , சின்னசாமி, கலையரசி, விஜயா


உணவுத்  திருவிழாவில்


கீரை,பழ வகைகள் ,ராகி,கம்பு ஆகிய தானியங்களில் செய்யப்பட்ட பாரம்பரிய உணவு பொருட்கள், சத்தான காய்வகைகள்,

பச்சைபயிறு,சுண்டல்,கொள்ளு,எள்ளு, உள்ளிட்ட பருப்பு வகை உணவு பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு உணவு பொருட்களிலும் உள்ள ஊட்டசத்து குறித்து மாணவர்கள் விளக்கினர்.


பின்னர் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் ஊட்டசத்துக்கள் குறித்த நன்மைகள், கைகழுவதால் ஏற்படும் நன்மைகள் கைகழுவாததால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினர். திறந்த வெளியில் மலம்கழிப்பதால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகுறித்தும் கழிவறைகளை முறையாக பயன்டுத்துவதின்  அவசியத்தை விளக்கினர்.மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள்குகுறித்து பேசப்பட்டது எனவே பிளாஸ்டிக்கை தவிர்க்கவேண்டும் என
மாணவர்களிடையே வலியுறுத்தி பேசினர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக